Friday, July 3, 2009

கவர்ச்சிக்கு கட்டுப்பாடு இல்லை-நயனதாரா

இது கிளாமர் உலகம். இங்கே கவர்சியாகத்தான் நடிக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை கவர்ச்சிக்குக் கட்டுப்பாடோ கிடையாது என்கிறார் நயன்தாரா.

ஐயா படம் மூலம் அறிமுகமான நயன்தாரா தமிழ், தெலுங்கில் 22 படங்களைத் தாண்டி விட்டார். ஹைதராபாத்தில் அவர் நிருபர்களைச் சந்தித்தார்.

உங்களைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகிறதே?

நான் அதுபற்றி கவலைப்படக்கூட எனக்கு நேரமில்லை. ஆரம்பத்தில் கிசுகிசுக்கள் என் மனதை காயப்படுத்தின. இப்போது பக்குவப்பட்டுவிட்டேன்.

யாரோ சில வேலையற்றவர்கள்தான் கிசுகிசுக்களைப் பரப்பி வீண் வேலையில் ஈடுபடுகிறார்கள், எனக்கு நிறைய வேலை இருக்கிறது. எனவே அதை பொருட்டாக நினைப்பதில்லை. நான் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வருகிறேன். அதுவும் இது போன்ற கிசுகிசுக்களுக்கு காரணமாக இருக்கலாம்.

பெரிய நடிகர்களுடன் நடிக்கிறீர்களே?

அரசியலுக்குண்டான தகுதி எனக்கில்லை! - கமல்

அரசியலில் நுழையும் எண்ணமோ, அரசியல்வாதிக்குரிய தகுதியோ எனக்குக் கிடையாது. ஆள்காட்டி விரலில் மை வைத்துக் கொள்ளும் அளவுக்குதான் எனக்குத் தகுதி உள்ளது என கலைஞானி கமல்ஹாசன் கூறியுள்ளார்.

அரசியல் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியொன்றில் அவர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

பொதுவாக எந்த ஒரு தொழிலில் ஈடுபடுவதாக இருந்தாலும் அதற்கு தனித் தகுதியும் திறமையும் வேண்டும். அரசியலுக்கும் அப்படி ஒரு தகுதி தேவைப்படுகிறது. எனக்கு அந்தத் தகுதி இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதேபோல அரசியல் குறித்த எனது பார்வைகளைக் கூட எந்த ஒரு பொது மேடைகளிலும் வைத்து நான் பகிரந்து கொண்டதில்லை.

ஆசின்...இப்படியெல்லாம் வதந்தி............

ஆசினுக்கு மும்பையில் நண்பர்கள் இன்னும் சரியாக செட் ஆகவில்லை என்று தெரிகிறது. குறிப்பாக திரையுலகில் ஆசினுக்கு வேண்டப்பட்டவர்கள் ரொம்பக் குறைச்சல் என்று எண்ணத் தோன்றுகிறது அவரைப் பற்றி அங்கு ஊர்ந்து கொண்டிருக்கும் ஒரு 'வாசனை'யான வதந்தியைப் பார்த்தால்.

முன்னணிக்கு வரும் ஹீரோயின் குறித்து திரையுலகில் வதந்திகள் கிளப்பப்படுவது சகஜமானதுதான். அது தமிழ் சினிமா என்று மட்டுமல்ல இந்திய சினிமா உலகம் முழுவதும் அது இருக்கத்தான் செய்கிறது.

அந்த வகையில் ஆசின் குறித்து மும்பையில் ஒரு வதந்தியை கிளப்பி விட்டுள்ளனராம். அது, ஆசின் ஷூட்டிங் முடித்து விட்டு கழற்றிக் கொடுக்கும் உடைகளை காஸ்ட்யூம் டிசைனரிடம் கொடுக்க முடியவில்லையாம்.

அசின்-நயன்தாரா... அப்பா, அம்மா இம்சைகள்!

ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய சம்பவங்கள். எப்பவும் அசினோடு ஒட்டிக் கொண்டே திரியும் அவரோட அப்பாவான மிஸ்டர் தோட்டம் கல், இப்போது தோட்டத்திலே கல்லு பொறுக்குகிற வேலைக்காவது போகலாமான்னு யோசிக்கிற அளவுக்கு சும்மாதான் இருக்காரு. ஏன்? இந்தி வாலாக்களுக்கு அசினை பிடிச்ச அளவுக்கு அவங்க அப்பாவை பிடிக்கலே! அவரு எதுக்கு எப்பவுமே உங்க கூட வர்றாரு. செக்யூரிடியான்னு கேட்கிற அளவுக்கு கிண்டல்! வேற வழியில்லாம “என் வேலைய நான் பார்க்கிறேன். நீங்க எதுக்கு?” என்று கூறிவிட்டாராம் அசின்.

தலைகீழாக தொங்கும் த்ரிஷா! படத்தில் வருமா பங்கி ஜம்ப்?

ஷி படத்தில் தலைகீழாக தொங்கி குலை நடுங்க வைப்பாரே விஜய்? அந்த ஆட்டத்திற்கு பங்கி ஜம்ப் என்று பெயர். முன்பெல்லாம் இந்த ஆட்டத்தை பார்க்கவோ, விளையாடவோ வெளிநாட்டுக்கு போக வேண்டும். இப்போது மிக சுலபம். நம்ம ஊருக்கே வந்து விட்டது பங்கி ஜம்ப். (யாரோ ஒரு கட்சித் தாவல் பார்ட்டி கண்டு பிடிச்ச விளையாட்டா இருக்குமோ?)

அடுத்த படம்? ஹாட் சேல்ஸ் நாயகன் சசிகுமார் பதில்!...................

சுப்ரமணியபுரத்தில் இயக்குனர், பசங்க படத்தில் தயாரிப்பாளர், நாடோடிகள் படத்தில் ஹீரோ! இப்படி முக்கடலில் குளித்து முத்தெடுத்திருக்கிறார் சசிக்குமார். இந்த ஹாட்ரிக் நாயகன்தான் இப்போது தமிழ் சினிமாவின் ஹாட் சேல்ஸ் நாயகனாகவும் ஆகியிருக்கிறார். நான் முழு நேர நடிகனல்ல. இனி நடிப்பதை விட, இயக்குவதில்தான் அதிக கவனம் செலுத்துவேன் என்று சசி பளிச்சென்று கூறிவிட்டாலும், நான் நீ என்று கதை சொல்ல க்யூ கட்டி நிற்கிறார்கள் சசி ஆபிசில். அடுத்தது என்ன? நடிப்பா, டைரக்ஷனா? ஒரு குழப்பமும் வேண்டாம். டைரக்ஷன்தானாம்

அஜீத்தின் குரலில் அசல் பாட்டு?.....

அண்டங்காக்கா தொண்டைக்காரிகளுக்கு மட்டுமல்ல, அண்டங்காக்கா தொண்டைக்காரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் டைரக்டர்கள்! ஒரு சைஸ்சா ஐஸ் வைக்கிற மெத்தர்டுதான் இது என்றாலும், விக்ரம் மாதிரி ஹீரோக்கள் காட்டில் ஒரே பாராட்டு மழை அடிக்கிறது. எல்லாம் கந்தசாமி படத்தின் கான மழையை பாராட்டிதான்! இப்போது போலவே இனிவரும் தனது படங்களில் ஒரு பாடலாவது பாடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் சீயான்.
 

Design by Amanda @ Blogger Buster